இன்று சமச்சீர் கல்வியை எதிர்க்கும் அறிவுஜீவிகள், தனியார்கள் தரமான கல்வியை வழங்குகிறார்கள் என்று ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த வணணம் உள்ளனர்.அவர்களின் தரமான கல்வியின் லட்சணத்தை நீங்களே பாருங்கள்.
இரண்டாம் வகுப்பு குழந்தையின் பொது அறிவுப் புத்தகத்தில் ஒரு பக்கம். சமூகத்திற்கு மிகவும் வேண்டியவர்களா இவர்கள். அதுவும் இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு ஏஞ்சலினா ஜோலி முதல் ஷகீரா வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் என்ன???
இப்பொழுதே அவர்களுக்கு உலக ஞானத்தை ஊட்டுகிறார்கள் போலும்.
இன்று தங்கள் பெற்றோரின் பிறந்த நாள் தெரியாத இளைய சமுதாயம், திரை நட்சத்திரங்களின் பிறந்த நாளினை கொண்டாடுகிறது. இவர்களினால் சமூகத்திற்கு என்ன பயன்?
பெட்ரோல் விலை உயர்வினை எதிர்த்து போராடினார்களா? இல்லை ஊழல் ஒழிய பாடுபட்டார்களா? இன்று கருப்பு பணம் வைத்திருப்பவர்களில், சினிமாத் துறையினர் தான் அதிகம் என்று பேசப்படுகிறது.
இவர்கள் அப்படி என்ன சாதித்து விட்டனர் என்று இவர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.
எங்கே செல்கிறோம் நாம்????

No comments:
Post a Comment